பக்கங்கள்

புதன், 22 அக்டோபர், 2008

அண்ணல் நபி அமுத வாக்கு

அண்ணல் நபி அமுத வாக்கு :
"சந்தேகப்படுவதிலிருந்து விலகி இருங்கள். ஏனெனில் சந்தேகத்துடன்சொல்லப்படும் விஷயம் மிகப் பெரும் பொய் ஆகும்.

பிறருடைய நன்மை, தீமைபற்றி அறிய வேண்டும் என்று செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றித் துருவித் துருவி ஆராயாதீர்கள்.

மற்றவர்களை விட அதிகமானவிலையைச் சொல்லாதீர்கள்.
பரஸ்பரம் பொறாமை கொள்ளாதீர்கள். ஒருவர் மீதுஒருவர் வெறுப்பு கொள்ளாதீர்கள்.

பரஸ்பரம் பகைமை பாராட்டாதீர்கள்.

தொடர்பைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள்.

இறைவனின் நல்லடியார்களாக, ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்."

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin