பக்கங்கள்

வியாழன், 30 ஏப்ரல், 2009

விஷமத்தனமான பிரச்சாரம்! மதன் கடுப்பு!




முஸ்லிம்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் எனச் சொல்வது விஷமத்தனமானது என்று கார்டூனிஸ்ட் மதன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைத்த இஸ்லாமியக் கண்காட்சியைத் திறந்து வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு மனம் திறந்துப் பேசினார்.

கேள்வி பதிலுக்கு பேர் பெற்ற மதன், "ஒரு தனி மனித வாழ்வில் எழும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் ஒரே வேதம் குர்ஆன் தான்" என மிகவும் சிலாகித்துச் சொன்னார்.

அவர் ஆற்றிய உரை முழுமையாக சமரசம் இதழில் வெளியாகியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

புதன், 29 ஏப்ரல், 2009

நலிவுற்றவர்களை மேம்படுத்துவதற்காக அதிரடித் திட்டம்!


நாட்டில் முஸ்லிம்கள் உள்ளிட்ட நலிவுற்ற மக்களை மேம்படுத்துவதற்காக அதிரடித் திட்டம் ஒன்றை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் வகுத்துள்ளது.

சுதந்தர இந்தியாவின் வரலாற்றில் இது வரை எந்தவொரு ஒற்றை அமைப்பும் செய்திராத மகத்தான திட்டம் இது.

விஷன் 2016 என இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து திட்ட இயக்குனர் பேராசிரியர் சித்தீக் ஹசன் சமரசம் இதழுக்கு அளித்த பேட்டி வருமாறு:


கூடுதல் தகவல்களுக்கு : விஷன் 2016
என். ஜி. ஒ.க்கள் பற்றிய புத்தகம்.

திங்கள், 27 ஏப்ரல், 2009

உள்ளத்தை உலுக்கிய படம்!!





று நிமிடங்களில் முடிந்து விடுகிற படம் அது.

ஆறாத வடுவை ஏற்படுத்தி விடுகிறது.

பசித்தவர்களுக்கு உணவளிப்பது தான் இஸ்லாம் என்றார் அண்ணல் நபிகளார் (ஸல்)
பசியை ஒழிக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்துவிடுவோம் என்று முழங்கினார் ஒரு கவிஞர். அந்த உணர்வு எங்கே?

உணர்வற்ற மக்களாய் வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போகிறோம்?
அந்தப் படத்தை embed செய்ய முடியவில்லை. இங்கு க்ளிக்கு செய்யவும்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

ஏழு நூறு மடங்கு இலாபம்!


அல்லாஹ்வின் வழியில் தங்கள் பொருள்களைச் செலவழிப்போரின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் போன்றதாகும். அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன. ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு அல்லாஹ் தான் நாடுவோருக்கு (அவர்களுடைய நற்செயல்களின் பயன்களை) பன்மடங்காக்குகிறான்.
(திருக்குர்ஆன். 2 : 261)

வியாழன், 16 ஏப்ரல், 2009

கனவு மெய்ப்பட...!



உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களிடம் - அல்லாஹ் வாக்குறுதி அளிக்கின்றான். என்னவெனில், அவர்களைப் பூமியில் கலீஃபா ஆக்குவான். அவர்களுக்கு முன் சென்று போன மக்களைக் கலீஃபா ஆக்கியது போன்று! மேலும், அவர்களுக்காக அல்லாஹ் எந்த மார்க்கத்தை விரும்பினானோ அந்த மார்க்கத்தை வலுவான அடிப்படைகள் மீது நிலைநாட்டுவான். மேலும், அவர்களின் (இன்று நிலவுகின்ற) அச்சநிலையை அமைதி நிலையாக மாற்றித் தருவான். எனவே அவர்கள் எனக்கே அடிபணியட்டும்; மேலும் என்னுடன் எதனையும் இணை வைக்காதிருக்கட்டும்.
(திருக்குர்ஆன் 24 : 55)

கலீஃபா - கிலாபத் நிலைநாட்டுவதற்கு இரண்டு அடிப்படைகள் : 1) இறைநம்பிக்கை, 2) நற்செயல்கள்.
அதற்கும் மேலாக ஏகத்துவம் .
இந்த மூன்றும் இல்லாமல் கிலாபத் ஒரு கனவு தான்.

,

LinkWithin

Blog Widget by LinkWithin