பக்கங்கள்

சனி, 25 அக்டோபர், 2008

செயல்படு; செலவு செய்; விலகி இரு!

செயல்படு; செலவு செய்; விலகி இரு!
அண்ணல் நபிகளார் (ஸல்) நவின்றார்கள்: "கற்றதற்கேற்ப செயல்பட்டவனுக்கும்தன்னுடைய தேவைகள் போக எஞ்சியதை (இறைவழியில்) செலவுசெய்தவனுக்கும் தேவையற்ற பயனற்ற பேச்சுக்களிலிருந்துசெயல்பாடுகளிலிருந்தும் விலகி இருந்தவனுக்கும் நற்செய்தி இருக்கிறது."
அறிவிப்பாளர்: ரகப் மிஸ்ரி (ரலி)
நூல்: தப்ரானி
விளக்கம்
இந்த நபிமொழியில் மூன்று விஷயங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்ணல் நபிகளார்(ஸல்) முன்று வகையான நபர்களுக்கு நற்செய்தி அறிவித்துள்ளார்.

முதலாமவர், தான் கற்றுக் கொண்டதற்கேற்ப செயல்படும் பண்பு கொண்டவர். இன்று அறிவுக்குப் பஞ்சம் கிடையாது. செயலுக்குத் தான் பற்றாக்குறை காணப்படுகிறது. Knowledge explosion என்கிற அறிவுப் புரட்சி வெடித்திருக்கிற யுகம் இது.

இந்த அறிவு யுகத்தில் மார்க்க அறிவு, மார்க்கத்தைப் பற்றிய தகவல்கள் கூட எல்லாருக்கும் மிகத் தாராளமாகவே கிடைக்கிறது...! எத்தனை பத்திரிகைகள்..! எத்தனை வலைத் தளங்கள்..! எத்தனை எத்தனை நூல்கள்..! தொலைக் காட்சி நிகழ்ச்சிகள்..!

இதன் காரணமாக 'சோதனை' கூட கடுமையாகிவிட்டது. தீமை எது? நன்மை எது? எதனைச் செய்ய வேண்டும்? எதிலிருந்து விலகி இருக்க வேண்டும்? எல்லோருமே அறிந்திருக்கிறார்கள்.
ஆனால் அறிவு மட்டும் போதாது. அறிவாளிகளுக்கு நற்செய்தி அளிக்கப்படவில்லை. கற்றதற்கேற்ப செயல்படுபவருக்கே நற்செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.
அடுத்ததாக நற்செய்தி சொல்லப்பட்டிருப்பவரின் சிறப்பு என்னவெனில் அவர் தன்னுடைய தேவைகளுக்கு அதிகமாக எஞ்சி இருக்கும் பொருளை இறைவனின் வழியில் செலவிடக் கூடியவராக இருப்பார்.
எது தேவை? எது ஆடம்பரம்? இந்த இரண்டையும் பிரிக்கின்ற எல்லைக் கொடு எது? நிர்ணயிப்பது கடினம். கொஞ்சம் சிக்கலான நுணுக்கமான பிரச்னை தான்.
எல்லோருமே தத்தமது வாழ்க்கைத் தரத்துக்கேற்ப தத்தமது தேவைகளை நிர்ணயிக்கின்றார்கள். ஆனால் தேவைக்கு அதிகமாக ஒருவரிடம் எத்துணை பொருள் இருக்கிறது என்பதை மற்றவர்களால் நிர்ணயிக்க முடியாது. ஒவ்வொருவரும் சுயமாக அதனை நிர்ணயித்துக் கொள்ளவது தான் நல்லது.

வெள்ளி, 24 அக்டோபர், 2008

அண்ணல் நபிகளார்(ஸல்) நவின்றார்கள்:

அண்ணல் நபிகளார்(ஸல்) நவின்றார்கள்:
"மனிதர்களுடன் கருணையுடன் நடந்துக் கொள்ளாதவன் மீது இறைவனும்கருணை காட்ட மாட்டான்."
அறிவிப்பாளர்: ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி)
நூல்: புஹாரி, முஸ்லிம்.

விளக்கம்:

இதே பொருளில் அநேக நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, "யார் கருணை காட்டுவதில்லையோ, அவர் மீது இறைவனும் கருணைகாட்ட மாட்டான்." (முஸ்லிம்) "மக்கள் மீது கருணை காட்டாதவர்கள் மீதுஇறைவனும் கருணை காட்ட மாட்டான்." (புஹாரி)

இதே போல இன்னொரு நபிமொழியில். "நம்மில் சிறியவர்கள் மீது அன்புசெலுத்தாதவனும் பெரியவர்களின் உரிமைகளை புரிந்து நம்மைச் சேர்ந்தவர்அல்ல" (அபூ தாவூத்) என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அஹ்மத், திர்மிதி ஆகிய நபிமொழித் தொகுப்பு நூல்களில் இடம் பெற்றுள்ள ஒருநபிமொழியில், "பெரியவர்களை மதிக்காதவனும் சிறியவர்களிடம் இரக்கத்துடன்நடந்துக் கொள்ளாதவனும் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கிற கடமையைநிறைவேற்றாதவனும் நம்மைச் சேர்ந்தவன் அல்லன் (நம்முடையவழிமுறையின்படி நடப்பவன் அல்லன்.)" எனச் சொல்லப்பட்டுள்ளது.

இந்த நபிமொழிகளிலிருந்து ஒரு உண்மை எடுப்பாக உறுதி செய்யப்பட்டுள்ளது: "இறைவனின் அடியார்களுடன் கனிவுடனும் அருளுடனும் நாம் நடந்துக்கொண்டால் மட்டுமே இறைவனின் உதவிக்கும் அவனுடைய இரக்கத்துக்கும்கருணைக்கும் தகுதியானவர்களாக ஆவோம்."

நாம் இவ்வாறு அழகிய இளகிய நடத்தையை மேற்கொள்வோமேயானால்இறைவனின் கருணை நமக்குக் கிடைத்து விட்டது என்று பொருள் ஆகும். நம்மிடம் அந்த இளகிய நடத்தையே இல்லையெனில் இறைவனின் உதவிகள், அவனுடைய கருணை, கிருபை ஆகியவற்றை விட்டு நம்மை நாமே வெகு தூரம்விலக்கிக் கொள்ள விரும்புகிறவர்கள் நாம் என்று பொருள் ஆகி விடும்.

நபிமொழியில் 'அன்னாஸ்' (மனிதர்கள்) என்கிற சொல் கையாளப்பட்டுள்ளது. மனிதர்களில் நம்பிக்கையாளர்கள், தீயவர்கள், நிராகரிப்பாளர்கள் எல்லோருமேஅடங்கி விடுவார்கள்.

எல்லா மனிதர்களும் நம்முடைய கிருபைக்கும் கருணைக்கும்உரித்தானவர்களே!
இன்னும் சொல்லப் போனால் இறைநிராகரிப்பாளர்கள்குறித்து நமக்குள் சற்று அதிகமாகவே அன்பும் கருணையும் தவிப்பும் இருக்கவேண்டும். இறைநிராகரிப்புப் போக்கிலிருந்து இவர்கள் விலக வேண்டாமா? இறைவேதனையிலிருந்து இவர்கள் தப்ப வேண்டாமா? என்கிற கவலைஅதிகமாக இருக்க வேண்டும்.

வியாழன், 23 அக்டோபர், 2008

இல்லை என்று சொல்லாத உயர்ந்த உள்ளம்!

இல்லை என்று சொல்லாத உயர்ந்த உள்ளம்!
அஸ்மா(ரலி) அறிவிக்கின்றார்கள்: அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்: "செலவிடு. எண்ணி எண்ணிக் கொடுக்காதே. இறைவனும் உனக்கு எண்ணிக்கொடுப்பான். கொடுக்காமல் மறுத்து விடாதே. இறைவனும் உனக்குக் கொடுக்கமறுத்து விடுவான். உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடு."
நூல்: புகாரி. முஸ்லிம்

புதன், 22 அக்டோபர், 2008

அண்ணல் நபி அமுத வாக்கு

அண்ணல் நபி அமுத வாக்கு :
"சந்தேகப்படுவதிலிருந்து விலகி இருங்கள். ஏனெனில் சந்தேகத்துடன்சொல்லப்படும் விஷயம் மிகப் பெரும் பொய் ஆகும்.

பிறருடைய நன்மை, தீமைபற்றி அறிய வேண்டும் என்று செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றித் துருவித் துருவி ஆராயாதீர்கள்.

மற்றவர்களை விட அதிகமானவிலையைச் சொல்லாதீர்கள்.
பரஸ்பரம் பொறாமை கொள்ளாதீர்கள். ஒருவர் மீதுஒருவர் வெறுப்பு கொள்ளாதீர்கள்.

பரஸ்பரம் பகைமை பாராட்டாதீர்கள்.

தொடர்பைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள்.

இறைவனின் நல்லடியார்களாக, ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்."

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்

செவ்வாய், 21 அக்டோபர், 2008

சிந்தனைத் துளிகள்: மனதுக்குள் வெளிச்சம்..!

சிந்தனைத் துளிகள் - மனதுக்குள் வெளிச்சம்...!
உஸ்மான்(ரலி) கூறினார்கள் :
உலகத்தைப் பற்றிய கவலையும் வேதனையும் மனதுக்குள் இருட்டைஏற்படுத்தும். மறுமை பற்றிய கவலை மனதுக்குள் வெளிச்சத்தைப்பாய்ச்சும்.

அண்ணல் நபி(ஸல்) அமுத வாக்கு

அண்ணல் நபி அமுத வாக்கு - இரண்டு இரண்டாக
அறிஞர்களுடன் சேர்ந்து இருப்பதைக் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். அறிஞர்களின் பேச்சைக் கேளுங்கள். ஏனெனில் வறண்டுக் கிடக்கின்ற நிலத்தை மழை நீர் செழித்துத் தழைத்தோங்கச் செய்வதைப் போல இறைவன் செத்துக் கிடக்கிற மனதை ஞானத்தின் ஒளியால் உயிர்த்தெழச் செய்கின்றான்.

அண்ணல் நபி(ஸல்) அமுத வாக்கு

அண்ணல் நபி(ஸல்) அமுத வாக்கு - இரண்டு இரண்டாக
  1. இரண்டு பழக்கங்கள் எல்லாவற்றையும் விடச் சிறந்தவை. அவை என்னவெனில் இறைநம்பிக்கையும் முஸ்லிம்களின் நலன் நாடுதலும் ஆகும்.
  2. இரண்டு பழக்கங்கள் எல்லாவற்றையும் விட மோசமானவை. அவை என்னவெனில் இறைவனோடு மற்றவர்களை இணையாக்குவதும் முஸ்லிம்களுக்கு கேடு விளைவிப்பதும் அவர்களுடன் மோசமாக நடந்துகொள்வதும் ஆகும்.

சனி, 18 அக்டோபர், 2008

அண்ணல் நபி (ஸல்) அமுத வாக்கு

அண்ணல் நபி (ஸல்) அமுத வாக்கு
அம்ருபின் அபச (ரலி) அறிவிக்கின்றார்கள். நான் அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களிடம் சென்று "இறைத்தூதரே! 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டேன். அண்ணல் நபிகளார் (ஸல்) விடையளித்தார்கள் : "பொறுமையும் வள்ளல்குணமும்"

LinkWithin

Blog Widget by LinkWithin