பக்கங்கள்

சனி, 26 ஜூன், 2010

தேவ கௌடா, அல்லாமா இக்பால் மற்றும் ஒரு புகைப்படம்


சென்ற செவ்வாய்க் கிழமை (22 ஜூன் 2010) கர்நாடக மாநில்த்தில் சிக்மங்களூருக்கு வந்த முன்னாள் பிரதமர் தேவ கௌடா வந்த போது அரங்கேறிய ஓர் காட்சியைத்தான் மேலே பார்க்கின்றீர்கள்.

தமிழ்நாட்டில் இது செய்தியே இல்லை என இழுக்கின்றீர்களா? கௌடாவின் முன்னால் விழுந்து கிடக்கின்றவர் மெத்தப் படித்தவர். அந்த நகரத்திலேயே பெரிய மருத்துவர். அதுவும் பல் மருத்துவர்.

அவரிடம் போகின்றவர்கள்தான் இந்நாள் வரை வாய் பிளந்து கொண்டிருந்தார்கள். இந்த நடத்தையின் மூலம் பார்க்கின்றவர்கள் எல்லாரையும் வாய் பிளக்கச் செய்துவிட்டாரே என்கிறீர்களா? அந்தக் கவலையை விடுங்கள்.

எனக்கு இந்தப் படத்தைப் பார்த்ததும் அல்லாமா இக்பாலின் ஈரடிக் கவிதைதான் நினைவுக்கு வந்தது.

ஏக் சஜ்தா ஜி ஸே தூ கிரான் சமஜ்தா ஹே
ஹஸார் சஜ்தே ஸே தேதா ஹே ஆத்மி கூ நஜாத்

“இறைவனுக்கு முன்னால் சிரம் பணிவது உனக்குப் பாரமாய்த் தெரிகின்றது. ஆனால் அது ஆயிரம் சிரம் பணிதல்களிலிருந்து உன்னை விடுவித்துவிடும்.”

இறைவன் மீதான அச்சம் இல்லாதவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் அச்சம்தான். பயம்தான்.

இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்றவர்களுக்கோ வேறு எந்த அச்சமும் இருப்பதில்லை. சக மனிதர்களுக்க முன்னால் சிரம் பணிய வேண்டிய தேவையும் இருப்பதில்லை.

“உதவி தேடுகின்றவர்களும் பலவீனர்களே. உதவி தேடப்படுகின்றவர்களும் பலவீனர்களே” (குர்ஆன் 22 - 73) என்கிற குர்ஆன் வசனம் நினைவுக்கு வருகின்றது என்கிறீர்களா?

சரிதான்.

LinkWithin

Blog Widget by LinkWithin