பக்கங்கள்

சனி, 26 ஜூன், 2010

தேவ கௌடா, அல்லாமா இக்பால் மற்றும் ஒரு புகைப்படம்


சென்ற செவ்வாய்க் கிழமை (22 ஜூன் 2010) கர்நாடக மாநில்த்தில் சிக்மங்களூருக்கு வந்த முன்னாள் பிரதமர் தேவ கௌடா வந்த போது அரங்கேறிய ஓர் காட்சியைத்தான் மேலே பார்க்கின்றீர்கள்.

தமிழ்நாட்டில் இது செய்தியே இல்லை என இழுக்கின்றீர்களா? கௌடாவின் முன்னால் விழுந்து கிடக்கின்றவர் மெத்தப் படித்தவர். அந்த நகரத்திலேயே பெரிய மருத்துவர். அதுவும் பல் மருத்துவர்.

அவரிடம் போகின்றவர்கள்தான் இந்நாள் வரை வாய் பிளந்து கொண்டிருந்தார்கள். இந்த நடத்தையின் மூலம் பார்க்கின்றவர்கள் எல்லாரையும் வாய் பிளக்கச் செய்துவிட்டாரே என்கிறீர்களா? அந்தக் கவலையை விடுங்கள்.

எனக்கு இந்தப் படத்தைப் பார்த்ததும் அல்லாமா இக்பாலின் ஈரடிக் கவிதைதான் நினைவுக்கு வந்தது.

ஏக் சஜ்தா ஜி ஸே தூ கிரான் சமஜ்தா ஹே
ஹஸார் சஜ்தே ஸே தேதா ஹே ஆத்மி கூ நஜாத்

“இறைவனுக்கு முன்னால் சிரம் பணிவது உனக்குப் பாரமாய்த் தெரிகின்றது. ஆனால் அது ஆயிரம் சிரம் பணிதல்களிலிருந்து உன்னை விடுவித்துவிடும்.”

இறைவன் மீதான அச்சம் இல்லாதவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் அச்சம்தான். பயம்தான்.

இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்றவர்களுக்கோ வேறு எந்த அச்சமும் இருப்பதில்லை. சக மனிதர்களுக்க முன்னால் சிரம் பணிய வேண்டிய தேவையும் இருப்பதில்லை.

“உதவி தேடுகின்றவர்களும் பலவீனர்களே. உதவி தேடப்படுகின்றவர்களும் பலவீனர்களே” (குர்ஆன் 22 - 73) என்கிற குர்ஆன் வசனம் நினைவுக்கு வருகின்றது என்கிறீர்களா?

சரிதான்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

ஊக்கமது கைவிடேல்!! - ஏ.பீ. முகம்மது அலி


ஏ.பீ. முகம்மது அலி அவர்கள் எழுதிய அருமையான கட்டுரை ஒன்றை நண்பர் முதுவை ஹிதாயத் அனுப்பி இருந்தார். மனதுக்குத் தெம்பளிக்கின்ற எழுத்துக்கள்..! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! சில திருத்தங்களுடன் இங்கே பதிவாகிறது!

2010 ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்த நிகழவு அது.
சென்னை மண்ணடியிலுள்ள முன்னாள் புதுக்கல்லூரி செயலாளர் ஒருவருடைய அலுவலகத்தில் இரண்டு முன்னாள் செயலாளர்கள் மற்றும் மியாசி(தி முஸ்லிம் எஜூகேஷனல் அசோசியேசன் ஆப் சதர்ன் இந்தியா,புதுக்கல்லூரி) உறுப்பினர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருக்கும் போது முஸ்லிம் மாணவர்களுக்கு அரசு வேலைகளுக்கான(ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ், தமிழக தேர்வுகள்) ஒரு பயிற்சி  மையம் புதுக்கல்லூரியில் ஆரம்பிக்க வேண்டும் என்றேன.;

அதற்கு ஒரு முன்னாள் செயலளரும் தற்போதைய உதவி தலைவருமான ஒருவர் சொன்னார் ‘போங்க, நம்ம பசங்க என்ன பயிற்சு கொடுத்தாலும் முன்னேற மாட்டார்கள். கிரசண்டு இன்ஜினீரிங் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி கொடுக்கிறார்கள் ஆனால் தேர்வு பெற்றவர்கள் எத்தனை பேர் சொல்லுங்கள் பார்ப்போம்’ என்றார்.

அவர்  தோல்விகளை முன்னுதாரணமாக எடுத்துச் சொன்னார். அதே நேரத்தில் நாட்டிலுள்ள 649 ஐ.ஏ.எஸ் வேலைக்கு சென்னை மனிதநேய மையம் நடத்தும் பயிற்சியில் 83 பேர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்ற வெற்றி உதாரணத்தினை எடுத்துக்கொண்டு தோல்வியினை முறியடித்து வெற்றிக்கனி பெறுவது என்ற செயலில் இறங்க அவர் மனம் நாடவில்லை. இதைத் தான் ஆங்கிலத்தில், ‘டிபீட்டிஸம்’ அதாவது ‘கையாலாகாத்தனம்’ என்று சொல்லுகிறார்கள்.
 
      பிரான்ஸ் நாடு பல ஆண்டுகளுக்கு முன்னால் போரில் அடுக்கடுக்காக தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்தது. 
 
அந்த நாட்டுத் தலைவருக்கு ஒரு நாள் பல இளைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த இளைஞர் கூட்டத்தில் நெப்போலியனும் இருந்தான். அந்தத் தலைவரிடம் நெப்போலியன், ‘ஏன் பிரான்ஸ் நாடு போரில் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டுள்ளது, உங்களுக்கு வெற்றி பெறும் திறமையில்லையா என்று வினவினார்?’ அப்போது அந்தத் தலைவர், நெப்போலியனைப்பார்த்து, ‘உன்னால் முடியுமா என்றார்?’ அதற்கு ஒரே வரியில் நெப்போலியன், ‘முடியும்’ என்றான். 
 
பின்பு நெப்போலியன் மிகவும் குறைந்த உயரமே கொண்டிருந்தாலும் பார்ப்பதிற்கு சிறுவன் போல இருந்தாலும் பிரான்ஸ் நாட்டுத்தலைவராகி போரில் வெற்றிக்கு மேல் வெற்றி ஈட்டினான். வுரலாற்றில் அவனது வெற்றியினை, ‘ஐ ஃபவுண்ட் தி துரோன் ஆப் பிரான்ஸ் ஆன் தி கிரவுண்ட், அன்டு ஐ பிக்ட்டு இட் பை மை ஸ்வோர்ட்’ என்று நெப்போலியன் சொன்னதாக ஆங்கிலத்தின் இருக்கிறது. அதாவது ‘பிரான்ஸ் நாட்டின் மகுடம் தரையில் வீழ்ந்து கிடப்பதினைக் கண்டேன், அதனை நான் எனது கத்தியால் எடுத்தேன்’ என்றான்.  ஆகவே சாதிக்க நினைத்தால் தோல்வி உன்னை நெருங்காது என்றால் மிகையாகாது.
 
      அமெரிக்காவில் மெம்பிஸ் கிறித்துவ சர்ச்சுகளுக்கு மக்கள் கூட்டம் குறைந்த அளவே வந்தனர். ஆகவே சர்ச் நிர்வாகிகள் எவ்வாறு கூட்டத்தினை அதிகரிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். அப்போது அவர்கள் சர்ச்சுகள் அருகில் உள்ள மைதானத்தில் குத்துச்சண்டை நிகழ்ச்சிகள் வைத்தால் மக்கள் பார்க்க அதிகம் வருவார்கள் அத்துடன் சர்ச்சுளிலும் பிராத்தனை செய்வார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. 
 
உடனே குத்துச்சண்டை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 
 
என்ன ஆச்சரியம்? 
 
அவர்கள் எதிர்பார்த்தது போல் ஏராளமானோர் சண்டையும் பார்த்துவிட்டு சர்ச்சுக்கும் வந்தனர். அதேபோல் 700 இவாஞ்சலி சர்ச்சுகளிலும் டி.வி. நிகழ்ச்சி ஏற்பாடு செய்து மக்களை இழுத்தார்களாம். 
 
இதனை இங்கு ஏன் சொல்கிறேனென்றால் சர்ச் நிர்வாகிகள் தோல்விக்கான காரணம் ஏன் என்று அறிஞர் சாக்ரடீஸ் சொன்னது போல யோசித்து நடவடிக்கை எடுத்ததால் அவர்கள் முயற்சியில் வெற்றி பெற்றார்கள். 
ஏன் கட்டுக்கோப்பான முஸ்லிம் சமுதாய அமைப்பினைக் கொண்டுள்ள நம்மால் முடியாதா? சென்னை சைதாப்பேட்டை மனித நேய மையம் போல் இலவச உணவு, தங்கும் இடம், பயிற்சி அளிக்க நமது முஸ்லிம் அமைப்புகளிடம் வசதி குறைவா? எத்தனை லட்சம் ரூபாய்கள் நன்கொடையாக வருகின்றன, மானியம் கிடைக்கிறது, வங்கியில் பிக்ஸட் டெப்பாசிட்டில் கோடிக்கணக்கான பணம் தூங்கும்போது முஸ்லிம் இளைஞர்களுக்கு ஏன் சென்னை மையப்பகுதியில் அரசுப்பணிகளுக்கு பயிற்சி அளிக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை? ஆனால் பதவி சுகமே மேலான ஒன்றாக கருதும் முஸ்லிம் தன்வான்களிடம் நாம் எதை எதிர்ப்பார்க்கமுடியும்?
      முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ் மற்றும் மாநிலத்தில் நடைபெறும் சர்வீஸ்கமிஷன் தேர்வுகள், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகள் சம்பந்தமாகவும் நான் விரிவாக 12.9.2009 அன்று ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையும்  6.2.2010  அன்று தமிழில், ‘வெற்றிக்கொடி நாட்டுங்களேன்-வீறு நடை போடுங்களேன் என்ற கட்டுரைகளை எழுதியுள்ளேன். 
 
தனி நபர்கள் ஐ.ஏ.எஸ் பயிற்சி பற்றி எழுதினாலும் அல்லது முகாம்கள் நடத்தினாலும் ஒரு இயக்கத்தின் சார்பாக நடத்தப்படும் பயிற்சி முகாம்கள் பலர் கவனத்தினை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. 
ஆகவே இப்போது நடக்கும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு ஐ.என்.டி.ஜே சார்பாகவும், தமுமுக மாணவரணி சார்பாகவும் பயிற்சி முகாம் அளிக்கப்படுவது வரவேற்க தக்க ஒன்று. அவர்களுக்கு தேவையான யோசனைகளையும் நான் தெரிவித்துள்ளேன் என்பதினை உங்களுக்கு இந்தத் தருணத்தில் கூறிக் கொள்கிறேன்.
       அவர்களுடைய சிறிய துவக்கம் நிச்சயமான பெரிய ஆலமரம்போல் பிற்காலத்தில் வளரும் என்பதில் ஐயமில்லை. பெரிய கட்டிடம் எழுப்ப சிறிய கல், ஒரு சட்டி சிமிண்ட் கலந்த மண்ணிலிருந்து தான் ஆரம்பமாகிறது. அது போலத்தான் சில எழுத்துக்கள் சேர்ந்து வார்த்தைகள் உருவாகும், ஒரு பட்டுப்புடவை செய்ய சில பட்டு நூல்கள் தேவை, பெரிய மாலை செய்ய பல பூக்கள் தேவை. குழந்தை பிறந்தவுடன் நடக்க முடியுமா? வெற்றியினை தங்கத்தட்டில் வைத்து யாரும் தாரை வார்ப்பதில்லை.
 
      எப்போதும் ஒரு மனிதன் தாழ்வு மனதோடு இருந்தால் வெற்றிக்கனியினை பறிக்க முடியாது. தோல்வி மனப்பான்மை கொண்டவர்களின் கருத்துக்களைக எப்போது முஸ்லிம் சமுதாயம் விட்டொழிக்கிறதோ அப்போதே நாம் எல்லாத்துறையிலும் வெற்றி பெறுவோம். 
 
ஆகவே சிறிய துவக்கமே சிறந்த முடிவாக இருக்கும் என்பதினை வழியுறுத்தி ஐ.என்.டி.ஜே அமைப்பினரையும் த.மு.மு.க அணியினரையும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு பயிற்சியில் தங்களை ஈடுபடுத்துவது போல் மற்ற அமைப்பினரும் பல் வேறு அரசு வேலைகளுக்கு நமது சமுதாய படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும்.
 
      பெரும்பாலும் காவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகளில் ஓட்டப்பந்தயம் 100, 400, 1500 மீட்டர்கள் இருக்கும் 1500 மீட்டர் ஓட வேண்டுமென்றால் நாம் தினமும் மூன்று கிலோ மீட்டர் தூரமாவது ஓடிப் பழகவேண்டும். பெரும்பாலும் நமது இளைஞரகள் கயிறு ஏறுதல், நெஞ்சு விரிவு போட்டிகளில் தோல்வி அடைவார்கள.; காரணம் கயிறு அல்லது மரம் ஏறி பழக்கம் இருக்காது, ஆகவே ஃபுல்அப்ஸ் எடுத்து பழகவேண்டும் மற்றும் மரத்தில் கயிறு கட்டி ஏறி பழகவேண்டும். அடுத்தது நெஞ்சு விரவு ஐந்து செண்டி மீட்டர் இருக்கவேண்டும். ஆனால் சிறு வயதில் தண்டால் அல்லது பெஞ்ச் பிரஸ் போன்ற பயிற்சி இல்லாதவர்கள் நெஞ்சு ஐந்து செண்டிமீட்டர் விரிவடையாது. மூச்சு இழுத்து 10வினாடி நிறுத்தும் பழக்கமிருந்தால் நெஞ்சு விரிவடையும். அதுபோல நீளத்தாண்டுதல், உயரத்தாண்டுதல் பழக்கமிருந்தால்தான் வரும். 
 
முஸ்லிம் சமுதாய மக்கள் வாழும் ஊர்களில் உள்ள கல்வி நிலையங்களில் உள்ள விளையாட்டு ஆசிரியர்களைக் கொண்டு அந்த பயிற்சி கொடுக்கலாம். சில இளைஞர்கள் பள்ளிக்கூடங்களில் விளையாடுவார்கள் ஆனால் படிப்பினை முடித்து விட்டு கல்லூரியிலோ அல்லது வேலை வாய்ப்பினைத் தேடிக்கொண்டுள்ளவர்கள் விளையாடுவது, ஓடுவது, உடற்பயிற்சி செய்வது இல்லை. 
 
நாம் எல்லா வயதிலும் உடற்பயிற்சியினை கைவிடக்கூடாது. அவை உங்கள் வேலைக்கு மட்டுமல்ல உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும். 
 
ஒரு பரிட்சையில் தேர்வு பெறவில்லையென்றால் மனந்தளராது உங்கள் ஊக்கத்தினை கைவிடாது உங்களது குறிக்கோளில் முனைந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் தான்.; ஆகவே தான் ஊக்கமது கைவிடேல் என்றேன்.

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது..!

மௌலானா முஜாஹிதுல் இஸ்லாம் காசிமி
  
அவர்கள் காத்திருந்தார்கள்..! 

ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது.
அந்த நடைமேடையில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டிருந்தனர். அவர்களில் முஸ்லிம்கள் கணிசமாக இருந்தனர். திரும்பும் திசையெல்லாம் வெள்ளை தொப்பிகளும், கருந்தாடிகளுமாக சூழலே வித்தியாசமாக இருந்தது.
ரயில் நிலையமே விழாக் கோலம் பூண்டிருந்தது போல தோன்றியது.
....  .... ....

Your attention please.... பயணிகளின் அன்பான கவனத்திற்கு.... என அறிவிப்பாளரின் குரல் ஒலித்ததும் ரயில் நிலையமே சிலிர்த்தெழுந்தது..!
போர்ட்டர்கள் முண்டாசு கட்டிக் கொண்டு, துண்டு பீடியை தூர எறிந்தவாறு ரயிலை எதிர்கொள்ள ஆயத்தமாகினர்.
ரயில் வந்தது.
முஸ்லிம்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பெட்டியை நோக்கி படையெடுத்தனர்.
அந்தப் பெட்டியிலிருந்து இறங்கினார், மௌலானா முஜாஹிதுல் இஸ்லாம் காசிமி.
....  .... ....

மௌலானா ஏதாவது சொல்லுங்கள்..அறிவுரை கூறுங்கள்..!

மௌலானாவுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. சிரித்த முகத்துடன் மௌலானா கை குலுக்கினார். நலம் விசாரித்தார்.

பச்சை விளக்கு எரிந்து விட மீண்டும் வண்டியில் ஏறி விட்டார்.

நடை மேடையில் நின்ற மக்கள் அன்போடு கேட்டார்கள் : Moulana kuch nasihat keejiye..! மௌலானா ஏதாவது சொல்லுங்கள்..அறிவுரை கூறுங்கள்..!

வண்டி மெல்ல நகரத் தொடங்கியது..!

மௌலானா சொன்னார்: Muthahid rahiye..! muththahrik rahiye..! முத்தஹித் ரஹியே..! முத்தஹ்ரிக் ரஹியே..! ஒன்றுபட்டு இருங்கள்..! சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருங்கள்..!
....  .... ....

இன்றும் நமக்குத் தேவைப் படுகிறார்கள்..!

அவர் தான் மௌலானா முஜாஹிதுல் இஸ்லாம் காசிமி. கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது   என்பதைப் போல எத்துணை அழகாக இரண்டே வார்த்தைகளில் சொல்லி விட்டார்!
மௌலானா மிகப் பெரும் பேச்சாளர். மணிக்கணக்கில் சலிப்புத் தட்டாமல் பேசுவதில் வல்லவர்.

2002 இல் இதே ஏப்ரல் மாதத்தில் 4 ஆம் நாள் அன்று காலமானார். (இன்னா லில்லாஹி..)

ICU இல் மரணப் படுக்கையில் இருந்த நேரத்திலும் நினைவு திரும்பும் போதெல்லாம் குஜராத் நிலவரம் குறித்து தான் விசாரித்துக் கொண்டிருந்தார்.

அவரைப் போன்ற ஆலிம்கள் தான் இன்றும் நமக்குத் தேவைப் படுகிறார்கள்..!
அல்லாஹ் கிருபை செய்வானாக..!

புதன், 24 மார்ச், 2010

எதனையும் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்!

அதனைச் சாதாரணமாக கருதிவிட்டீர்கள். ஆனால், அல்லாஹ்விடத்தில் அதுவோ, மிகப் பெரிய விஷயமாய் இருந்தது.

(குர்ஆன் : 24 : 15) 

புதன், 10 பிப்ரவரி, 2010

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மாநாடு!!










அன்புச் சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்
திருச்சியில் நடந்து முடிந்த ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மாநாட்டில் ஜமாத்தே இஸ்லாமி அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுதீன் உமரி அவர்கள் ஆற்றிய உரை தான் மேலே தரப்பட்டது.

LinkWithin

Blog Widget by LinkWithin